Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம் புல் குறித்து தெரிந்துகொள்வோம்!

மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம் புல் குறித்து தெரிந்துகொள்வோம்!

By: Monisha Sat, 27 June 2020 3:16:20 PM

மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம் புல் குறித்து தெரிந்துகொள்வோம்!

அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி இயற்கை மருத்துவத்தில் உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதாகவும் உள்ளது. அருகம் புல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றும்.

அருகம் புல் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றம் தன்மையுடையது. வயிற்றிலுள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை வெளியேற்றும். அடிக்கடி வரும் காய்ச்சலைத் தணிக்கும். ஞாபக சக்தியைப் பெருகும். சிறுநீர் பையில் உள்ள கல் நீங்க, நரம்பு தளர்ச்சி நீங்க, இதைய கோளாறு குணமாக, தோல் வியாதிகள் குணமாக அருகம் புல் சிறந்த மருந்து.

medicine,arugampul,wellness,hemoglobin,memory ,மருந்து,அருகம் புல்,ஆரோக்கியம்,ஹீமோகுளோபின்,ஞாபக சக்தி

மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குஷ்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாகிறது. நெஞ்சில் இருக்கும் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு அருகம் புல் சிறந்தது. கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது.

அருகம் புல் உடல் எடை, சளித் தொல்லை, ஜலதோஷம், இருமல், நீர்க்கோவை, வயிற்று வலி, கண்பார்வை கூர்மை, வயிற்றுப்போக்கு அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும். ரத்த சோகை, மூக்கில் ரத்த கசிவு, மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, ரத்த புற்றுநோய் ஆகிய அனைத்து நோய்களும் குணமாகும்.

Tags :