Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

By: Monisha Wed, 17 June 2020 3:18:58 PM

கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கருஞ்சீரகம் ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்து நல்ல ஆரோகியத்தை அளிக்கும். கருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்பாடு நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.

கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும். கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

karunjeeragam,herbal,health,medicine,remedy ,கருஞ்சீரகம்,மூலிகை,ஆரோக்கியம்,மருத்துவம்,நிவாரணி

கருஞ்சீரகத்தின் நீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி போன்றவை தீரும். கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும். சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவிவர முகப்பரு மறையும்.

கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணெய்யில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.

Tags :
|
|