Advertisement

பல்வேறு நோய்களுக்கு தீர்வாகும் ‌பிரண்டை!

By: Monisha Mon, 19 Oct 2020 1:00:32 PM

பல்வேறு நோய்களுக்கு தீர்வாகும் ‌பிரண்டை!

‌பிரண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்குவாத நோய்களுக்கு பிரண்டைச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது. ‌மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள் அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். இந்த பிரச்னையுள்ளவர்கள் பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்.

‌பிரண்டைச்சாறு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது‌. மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் விடுபடலாம். கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது‌.

pirandai,health,medicine,digestion,asthma ,பிரண்டை,ஆரோக்கியம்,மருந்து,செரிமானம்,ஆஸ்மா

‌பிரண்டைச்சாறு சுக்கு மிளகு கொதிக்க வைத்து அருந்த உடல்வலிக்கு அருமருந்து. ‌பிரண்டை இலை மற்றும் பிஞ்சித்தண்டை நிழலில் உலர்த்தி அரைத்து அஜீரணத்திற்கு சாப்பிட செரிமானாம் அதிகரிக்கும்.

‌பிரண்டை குடல்புழுக்களை அழிக்கிறது, பசியைத் தூண்டுகிறது வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது. ‌தோல் நோய்கள், தொழுநோய், இரத்தப்போக்கு, கால் கை வலிப்பு, வலிப்பு நோய், நாள்பட்ட புண்கள், வீக்கம் ஆகியவற்றிற்கும் அருமருந்து.

‌உடல் எடை வயிற்றைக் குறைக்க உதவுகிறது. ‌நன்கு பருத்த பிரண்டைத்தண்டை துவையலை மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்திற்கும் பயன்படுத்தலாம்.

Tags :
|