அதிகளவு நூற்கோல் எடுத்துக் கொண்டால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்
By: Nagaraj Mon, 02 Jan 2023 5:49:04 PM
சென்னை: நூற்கோல் மிகவும் சத்தான காய்கறி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. இதில் உள்ள அதிக அளவிலான ஃபோலேட் சத்து இதயத்தை பாதுகாப்பதோடு மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது.
இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது. செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பொதுவாக இதை ஜூஸ், காய்கறி, சாலட் வடிவில் சாப்பிடலாம். ஆனால் இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் நூற்கோலை அதிகமாக உட்கொண்டால், அது உடலில் எப்படி மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நூற்கோல் உடலுக்கு சூட்டை கொடுக்க கூடிய காய்கறி. எனவே அதிகமாக
சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க
நேரிடலாம், எனவே கவனமாக இருங்கள்.
நூற்கோலை
அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு
வழிவகுக்கும். இதன் காரணமாக நீங்கள் விரைவில் சோர்வு மற்றும் பலவீனத்தை
சந்திக்க நேரிடும். இதில் அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளும்
பாதிக்கப்படும்.