Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்

அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்

By: Nagaraj Sat, 15 July 2023 12:42:35 PM

அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்

சென்னை: உலக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) ஆய்வின்படி, நம்முள் 10% மட்டுமே ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தேவையான, பரிந்துரைக்கப்பட்ட இரண்டு கப் பழங்களை சாப்பிடுகிறோம். என்ன தான் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

கோடை காலத்தில் நாம் தர்பூசணியை அதிகம் விரும்பி உண்ணுவது வழக்கம். ஆனால் சிலருக்கு தர்பூசணி பழம் உண்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்படுவதும் வழக்கம் தான். அது என் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், "தர்பூசணியில் கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால், நீண்ட கால பாதிப்பைப் பற்றி யோசிக்காமல் ஒவ்வொரு நாளும் தர்பூசணியை சாப்பிடலாம். ஆனாலும் நாம் உண்ணும் பழங்களின் வகைகளை மாற்ற முயற்சிப்பது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

watermelon,flatulence,indigestion,sour belching,polyols ,தர்பூசணி, வயிறு வீக்கம், சிக்கல், புளித்த ஏப்பம், பாலியோல்கள்

வெவ்வேறு பழங்களில் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், பலவகை பழங்களை மாற்றி சாப்பிடுவது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் பெறுவதை உறுதி செய்யும்." என்றனர்.

கோடை காலத்தின் வெப்பமான மதிய நேரத்தில் உணவிற்கு பதிலாக ஒரு முழு தர்பூசணியின் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட அளவை நாம் சாப்பிட முற்படும் நேரங்களிலும் கூட, பொதுவான பரிந்துரைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒரு கப் மட்டும் சாப்பிடுவதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

தர்பூசணி பழத்தில் எளிதில் புளிக்கக்கூடிய ஆலிகோ-சாக்கரைடுகள், சாக்கரைடுகள், மோனோ-சாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள் போன்ற குறுகிய சங்கிலி சர்க்கரைகள் அதிகமாக இருப்பதால், அதனை உண்ணும் பொழுது சிலருக்கு செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக அளவில் உட்கொள்ளும்போது வயிறு வீக்கம், புளித்த ஏப்பம் அல்லது வயிற்றில் அசௌகரிய உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Tags :