Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் கிடைக்கும் 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

தினமும் கிடைக்கும் 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

By: Karunakaran Mon, 02 Nov 2020 2:03:40 PM

தினமும் கிடைக்கும் 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது. அர்ப்பணிப்புடன் எடுத்த காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை ஒதுக்க முடியாத காரியத்தில் ஈடுபடக் கூடாது. நிச்சயம் நம்மால் செய்யப்பட வேண்டிய, முடிய கூடிய செயலை செய்ய மட்டுமே நேரத்தை ஒதுக்க வேண்டும். தொடர்ந்து விருப்பம் உள்ள செயல்கள் பின்பற்றுதல் நம் மனம் மகிழக் கூடிய, புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் திருப்தி அளிக்க கூடிய செயல்களை செய்தல். அத்தகைய நிறுவனங்களில், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் கவனம் செலுத்த வேண்டும்.

நேரத்திற்கு ஏற்ற செயலை செய்தல் அல்லது செய்யும் செயலுக்கு ஏற்றப்படி செயலை செய்தல். ஒரு செயல் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை கணிப்பது கடினமான ஒன்று. முடிந்தவரை குறிப்பிட்ட நேர இடைவெளி கொடுத்து பணிகளை செய்வதற்கு பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்ய பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நான்கு வேலையை ஒரே நேரத்தில் செய்ய முயன்றால் ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். வேலையை மாற்றி மாற்றி செய்வதால் கவன சிதறல் ஏற்பட்டு நாம் நினைத்த நேரத்தில் வேலையை செய்ய முடியாமல் போகும்.

24 hours,work,activation,satisfaction ,24 மணி நேரம், வேலை, செயல்படுத்தல், திருப்தி

மிகப்பெரிய கால அளவில் செய்யக்கூடிய வேலைகளை, படிப்பும் மற்றும் பயிற்சிக்கான தனிப்பட்ட நேரத்தை குறிப்பிட்ட கால அளவில் ஒதுக்கி கொள்ள வேண்டும். பணிகளை ஒரு நாளில் செய்வதற்கு அட்டவணைப்படுத்தும் போது அதில் முக்கியமான பணியை முதலில் செய்வதற்கு குறித்து கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுபோல் எந்த பணியை முதலாவதாக செய்ய முடியுமோ அதை முதலாவதாக குறித்து கொள்ள வேண்டும். ஒரு நாளில் சில நேரம் ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த பணியை செய்ய முடியாவிட்டால் வேறு பணியை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஒரு பணியை செய்ய முற்படும்போது மற்றொரு பணியை பற்றி கவலைப்பட வேண்டாம். அப்படி கவலைப்படுவற்கு பதில் நேரத்தை சற்று குறைந்து கூட அட்டவணையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நம் வேலை செய்யும் சூழ்நிலையை நமக்கு தகுந்தவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரையில் கவனச் சிதறல் ஏற்படுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிக்கு உரிய சக நண்பர்களை ஒரு குழுவாக வைத்து பணி செய்யலாம். பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவையில்லாமல் தொலைபேசி அழைப்புகள் வருவதை தடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தொலைபேசியில் அழைப்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கால நேரத்தை பணிக்கு ஏற்றவாறு ஒதுக்கி நடைமுறை படுத்த வேலைபளு மிச்சமாகும். மனதுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Tags :
|