Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தேங்காய்ப்பால் பானம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தேங்காய்ப்பால் பானம்

By: Nagaraj Wed, 26 Oct 2022 08:57:40 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தேங்காய்ப்பால் பானம்

சென்னை: தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

தேவையான பொருள்கள்

தேங்காய் - அரை மூடி
சுக்குப் பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் - அரை ஸ்பூன்
மிளகு பொடி - அரை ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்

turmeric,suku powder,coconut milk,health,immunity ,மஞ்சள், சுக்கு பொடி, தேங்காய்ப்பால், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு

செய்முறை: தேங்காயை நன்கு துருவி, சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பால் தவிர மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து 1 ஸ்பூன் அளவு பசும்பால் சேர்த்து நன்கு கலக்குங்கள். இதை தேங்காய்ப் பாலில் கலந்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தவும். தேங்காய்ப் பாலை அதிகமாக சூடு செய்யக் கூடாது.


லேசாக குடிக்கும் அளவு சூடேறியதும் எடுத்து விடுங்கள். இல்லாவிடில் தேங்காய்ப்பால் திரிந்து விடும். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தேங்காய்ப்பால் பானம் ரெடி.மஞ்சள், சுக்கு பொடி, தேங்காய்ப்பால், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு

Tags :
|