Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்

By: Nagaraj Thu, 12 Jan 2023 11:50:53 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்

சென்னை: பசிக்கும், ருசிக்கும் உணவருந்திய நம் தலைமுறை தற்போது தன் அடுத்த தலைமுறையின் உணவு பழக்கத்தை கண்டு வருத்தப்படுவதாக உள்ளது. சிறுதானியங்கள் என்று சொல்லப்படும் கம்பு, தினை முதலான தானியங்களை உண்ட போது இல்லாத பலவிதமான நோய்கள் தற்போது இளவயதிலேயே வந்து விடுகிறது.

நாம் உண்ணும் உணவில் சத்துக்களை விட தற்போது நச்சுக்களே அதிகம் உள்ளதால் உணவே நஞ்சாகி விடுகிறது. கையில் சிறுதானியங்கள் என்ற வெண்ணெய் இருக்க ஆரோக்யம் என்ற நெய்யை தேடி அலைய வேண்டியதில்லை. ருசியாக பக்குவமாக சமைக்க இளம் வயதினரும் அன்றாடம் உணவில் விரும்பி உண்பர். அதில் உள்ள சத்துக்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.

தினை: இந்த தானியம் உலக அளவில் பயிரிடப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சமைப்பது எளிது. செரிமானமும் எளிதில் ஆகி சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

health,health,bones,health,good food ,ஆரோக்கியம், வரகு, எலும்புகள், கேழ்வரகு, சிறந்த உணவு

சாமை: சாமை அதிக மருத்துவ குணம் கொண்டது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி வாய்ந்தது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும். எல்லா வயதினரும் உண்ண ஏற்றது.

வரகு: வரகு தண்ணீர் அதிகம் இல்லாமல் நன்கு வளரக் கூடியது. உடல் எடையை குறைக்க வல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தருவது. கண் பார்வை தெளிவைத் தந்து ஆரோக்கியமான தேகத்தை கொடுக்கும்.

கம்பு: கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது. வயிற்றுப் புண், குடல் புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. இரும்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளர் பருவத்தினர் உணவாக உட்கொள்ள ஆரோக்யம் மேம்படும்.

கேழ்வரகு அல்லது ராகி: கேழ்வரகில் கால்சியம் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் . குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு. வயது அதிகமானோர் கேழ்வரகை ரெகுலராக எடுத்துக் கொள்ள எலும்புகள் வலுவாக்கி, அவர்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தும்.

Tags :
|
|
|
|