Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்தம் சுத்தம் அடைய செய்யும் தன்மை கொண்ட நார்த்தங்காய்

ரத்தம் சுத்தம் அடைய செய்யும் தன்மை கொண்ட நார்த்தங்காய்

By: Nagaraj Fri, 19 May 2023 4:23:04 PM

ரத்தம் சுத்தம் அடைய செய்யும் தன்மை கொண்ட நார்த்தங்காய்

சென்னை: உணவே மருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது. நோய் தீர்க்கும் நார்த்தங்காய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நார்த்தங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர ரத்தம் சுத்தம் அடையும். வயிற்றுப்போக்கு, வாதம் நீங்கும். இதன் சாற்றை தண்ணீர், உப்பு அல்லது சர்க்கரை கலந்து பருக பித்த வாந்தி குணமாகும். உடல் சூட்டை தணிக்க கூடிய மிகச்சிறந்த மருத்துவ குணம் மிக்க இந்த நார்த்தங்காயை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வருவது நல்லது. மூட்டு வலிக்கு சிறந்தது.

இதனை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நான்கு நாட்கள் ஊற விட்டு வெயிலில் காய வைத்தோ அல்லது அப்படியே உணவில் சேர்த்து வந்தால், சிறந்த வகையில் பசியை தூண்டக்கூடியது. நாக்கில் ஏற்படும் அருசியை போக்கவல்லது. சிலருக்கு சாப்பிட உட்கார்ந்தாலே பிடிக்காது. உணவின் மீது ஒரு வெறுப்பு ஏற்படும்.

narthangai,bile,anorexia,bukum,mustard,rice ,நார்த்தாங்காய், பித்தம், பசியின்மை, போக்கும், கடுகு, சாதம்

இப்படி இருப்பவர்கள் தயிர் சாதத்தில் உப்பு, பெருங்காயத்தூள், சிறிது சுக்கு பொடியும் கலந்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த நார்த்தங்காயை பயன்படுத்த நல்ல பசி எடுக்கும். ஜீரணம் ஆகும். சாப்பிடும் ஆவலைத் தூண்டும்.

இதன் சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வர உடல் வலுப்பெறும். நார்த்தங்காயை கொண்டு, கலந்த சாதம் செய்யலாம். கொத்சு செய்யலாம். இதன் இலைகளைக் கொண்டு வேப்பிலை கட்டி தயார் செய்து தயிர் சாதத்துடன் சாப்பிட பித்தம் பசியின்மையையும் போக்கும்.

நார்த்தங்காய் சாதம்: எலுமிச்சை சாதம் போல் இதற்கும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து உதிர் உதிராக வடித்த சாதம், உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவுக்கு நார்த்தங்காய் சாறு சேர்த்து கலக்க சுவையான, வாய்க்கு ருசியான நார்த்தங்காய் சாதம் ரெடி.

Tags :
|
|