Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கண்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்... சில டிப்ஸ் உங்களுக்காக!!!

கண்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்... சில டிப்ஸ் உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 19 Aug 2023 07:00:50 AM

கண்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்... சில டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: அடிக்கடி கண்களை மூடித் திறப்பது குறைபாடா என்பதற்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள தகவல்களை தெரிந்து கொள்வோம்.

கண்கள் வறண்டு விடாமலிருக்க, கண்ணீர் கசிவு எப்போதும் கண்களில் இருக்கும்படியான விதத்தில் நீர் சுரப்பிகள் வேலை செய்து கொண்டே இருக்கின்றன. கருவிழிகளில் இரத்த நாளங்கள் இல்லாமையினால், அதற்குத் தேவையான புத்துணர்ச்சி தரும் சத்தான பகுதிகள் வராததால், கண்ணீர் வழியாக அவை புத்துணர்வு பெறுகின்றன. கண்களில் நீரின் வரத்து குறைந்து போனதற்கான வாய்ப்புகளிருப்பதால் அடிக்கடி கண்களை மூடி திறக்கும் இந்தக் குறைபாடு ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஒரே பொருளை உற்று நோக்க வேண்டிய சூழ்நிலையும், பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த உபாதை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கண்களுக்குப் போதுமான அளவு ஓய்வு கொடுக்காதிருப்பதாலும் இந்த உபாதை தலைதூக்க வாய்ப்பிருக்கிறது.

கண்களை மூடிக் கொண்டு, வாயில் நீர் நிரப்பி, கண்களைத் தண்ணீரால் கழுவிவிடுவதால், கண்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும். இதை ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறைக் கூடச் செய்யலாம். கண் இமைகளில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து, அதனால் ஏற்படும் சூட்டை கண் இமைகளின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பது நலம்.

eyes,protection,vilamichai,vetiver,potted water,advice ,கண்கள், பாதுகாப்பு, விலாமிச்சை, வெட்டிவேர், பானை நீர், ஆலோசனை

துணியை சிறிய பந்து போலச் சுருட்டி, வாயின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். அது போலச் செய்வதும் நல்லதே. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை செய்யலாம். பன்னீரில் கைவிரல் நுனிகளை நனைத்து கண் இமைகளை மூடி, அதன் மீது ஒரு நாளில் இரு முறைதடவி விட்டு, இதமாக மசாஜ் செய்து கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் அல்லது தூய தேங்காய் எண்ணெய்யையும் இது போலப் பயன்படுத்தலாம். உடலில் நீர்சத்து குறையாதிருக்க, நிறைய நீர்த் திரவங்களைப் பருக வேண்டும்.

மேலும் ஈரப்பசையே இல்லாத காற்றுப் பகுதிகளில் சஞ்சரித்தல், கடும் கோடையில் வெயிலில் குளிர் கண்ணாடி அணியாமல் செல்லுதல், கால்களில் காலணி அணியாமல், சூடான தரையில் நடத்தல், தலைக்கு எண்ணெய் தடவாமல், வெந்நீரைத் தலைக்கு விட்டுக் குளித்தல், தலை கவிழ்ந்து உறங்குதல் போன்ற சில காரணங்களால், கண் இமைகள் வலுவிழந்து கொட்டக் கூடும்.

கண்களையும், கண் நரம்புகளையும் வலுப்படுத்தக் கூடிய பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, பசும்பால், பசு நெய், கேரட், கோழி முட்டை, பப்பாளிப் பழம், நெல்லிக்கனி, இந்துப்பு போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம். உடலில் நீர்வறட்சி, கண்களையும் வறட்சியாக்குவதால், அதைத் தவிர்க்க - இளநீர், பனைநுங்கு, முலாம்பழம், வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடலாம். விலாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர் குடிக்கப் பயன்படுத்தலாம்.

Tags :
|