Advertisement

குடல் புண்களை ஆற்றும் கஸ்தூரி மஞ்சள்!

By: Monisha Wed, 09 Dec 2020 2:41:35 PM

குடல் புண்களை ஆற்றும் கஸ்தூரி மஞ்சள்!

கஸ்தூரி மஞ்சள் அழகு மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. கஸ்தூரி மஞ்சள் மூட்டு வலியை குணப்படுத்தும். வயிற்று புண்களை ஆற்றும், தலைபாரத்தை சரிசெய்யும் தன்மை உடையது. மேலும், கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளையும் அழிக்க வல்லது.

கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர்.

செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். உள் உறுப்புகளை தூண்டும். உடலுக்கு பலம் தரும். தோல்நோய்களை போக்கும். உடலில் தேவையற்ற முடிவளர்வதை தடுக்கிறது. நுரையீரல் நோய்களை குணப்படுத்துகிறது.

அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள் உடலில் சேராத வண்ணம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

Tags :
|