அளவாக உண்டால் அமிர்தம்... அதிகமானால் என்னாகும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
By: Nagaraj Sun, 16 Oct 2022 09:40:25 AM
சென்னை: எந்த உணவுகள் எடுத்துக்கொண்டாலும் அளவாக சாப்பிடவேண்டும் , அதிகமானால் சில உபாதைகள் ஏற்படும். எந்த உணவு எடுத்தால் எந்த நோய் தோன்றும் என இந்த தெரிந்து கொள்வோம்.
பச்சரிசி அதிகமானால்- சோகை நோய். அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம். பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி, இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும். பழைய சோறு, கஞ்சி அதிகமானால் – வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும். தேங்காய் அதிகமானால் – சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
மாங்காய் அதிகமானால் – வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால் – வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.
பாதாம் பருப்பு அதிகமானால் – வாய் சுவை மாறும். பித்த அதிகமாகும். வயிறு
மந்தமாகும். முற்றிய முருங்கை சாப்பிட – வாயு சளி உண்டாகும். எருமைப்பால்
அதிகம் குடிக்க – கிட்னி கல், அறிவு மங்கும். மிளகு – உடம்பில் சக்தி
இல்லாதவர்கள். அதிகம் உண்டால் உடல் வெப்பம் உண்டாகும்.
மிளகாய்
அதிகமானால் -வெப்பம் அதிகரிக்கும், சளி அதிகரிக்கும். காபி அதிகமானால் – கை
நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும். டீ அதிகமானால்
– உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை
ஏற்படும்.