Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பிரியாணி இலையில் உள்ள மருத்துவக்குணம் பற்றி தெரியுமா!

பிரியாணி இலையில் உள்ள மருத்துவக்குணம் பற்றி தெரியுமா!

By: Nagaraj Sun, 14 June 2020 9:22:01 PM

பிரியாணி இலையில் உள்ள மருத்துவக்குணம் பற்றி தெரியுமா!

பிரியாணி இலையை நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது வாசனைப் பொருளாகத் தான். ஆனால் மருத்துவக்குணங்கள் இதில் அடங்கி உள்ளது தெரியுங்களா.

நாம் அனைவருமே பொதுவாக பிரியாணி இலையை சமையலுக்காகத்தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பிரியாணி இலை வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை ஆகும்.

தினமும் நம் வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் நமக்கு பல நன்மைகளை தருகிறது .

biryani leaf,smoke,air,cleanser,nerves ,பிரியாணி இலை, புகை, காற்று, சுத்தப்படுத்தும், நரம்புகள்

முதலில் பாத்திரம் ஒன்றில் காய்ந்த பிரியாணி 2 அல்லது 3 இலைகளை எடுத்து கொள்ளவும். பிறகு படுக்கையறைக்கு சென்று ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை பற்றிவிட்டு கதவை மூடிவிட்டு வெளியே வர வேண்டும்.

அதனை அடுத்து 10 நிமிடத்திற்கு பிறகு அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 முறை அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில் தினமும் செய்து வர பல்வேறு நன்மைகள் உண்டாகும். என்ன நன்மைகள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிரியாணி இலையை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசித்தால் மூளையின் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்கும். மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். அதேப்போல் வீட்டினுள் உள்ள காற்றை சுத்தப்படுத்தும். இவ்வாறு இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

Tags :
|
|