மருந்துகளாகவும் பயன்படும் மளிகைப்பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
By: Nagaraj Mon, 06 Feb 2023 10:16:08 AM
சென்னை: மளிகை சாமான்கள் சமைக்க மட்டுமல்ல, மருந்துகளாகவும் பயன்படுகின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் எப்படி மருந்துகளாக நமக்கு உபயோகம் ஆகிறது என்று தெரிந்து கொள்வோம்.
வெந்நீரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு குடித்தால் வயிற்று வலி குறையும். பழைய சாத நீராகாரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து பருகி வர, வெயில் காலத்தில் வரும் வயிற்றுக் கடுப்பு, உஷ்ணம் நீங்கிவிடும்.
ஓமத்தை வறுத்து அதனுடன் சிட்டிகை உப்பு, வெல்லம் கலந்து சாப்பிட்டால் வாய்வு தொல்லை வராது, உணவும் எளிதில் ஜீரணம் ஆகும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, வயிற்று வலி தீரும்.
Tags :
salt |
turmeric |