மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரபிரசாதமாக விளங்கும் அதிமதுரம்
By: Nagaraj Wed, 19 Oct 2022 10:02:53 PM
சென்னை: அதிமதுரம் மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமல் தடுக்க அதிமதுர மூலிகை பயன்படுகிறது.
வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.
அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள்
எடுத்துக்கொள்வது நல்லது. இது அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான
சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.
அதிமதுர
தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும்
வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள்
நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.