Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவ குணம் கொண்ட புதினாவால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ குணம் கொண்ட புதினாவால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Tue, 11 Oct 2022 10:51:28 AM

மருத்துவ குணம் கொண்ட புதினாவால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

சென்னை: புதினா இலைகள் , இந்திய துணை கண்டத்தில் பழங்காலம் முதல் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்ட உணவு பொருள். சமையலறையில் இதனை நாம் அதிகம் கண்டிருப்போம். எலுமிச்சை டீயுடன் சிலர் இதனை சேர்த்து பருகுவர். துவையல், ஜூஸ், சாலட், சூப் போன்றவற்றில் இதனை பெரும்பாலும் பயன்படுத்துவர். இதன் நறுமணம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

பற்பசை, சூயங்கம் போன்றவற்றில் புதினாவின் சாறை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் புதினா ஒரு கிருமிநாசினி. இவற்றை தாண்டி, புதினாவின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு. நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய் துர் நாற்றத்தை களைகிறது.

புதினா, ஆசிய மற்றும் ஐரோப்பிய துணை கண்டத்தில் பெருமளவு பயிர் செய்யப் படுகிறது. மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும், இவை காணப்படுகின்றன. புத்தனா புதிதாக பறித்த இலை வடிவத்திலும், காய்ந்த இலைகளாகவும், எண்ணெய் வடிவிலும் அதிகமாக பயன்படுத்தபடுகின்றன. ஒவ்வொரு விதமாக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.

புதினாவின் ஆரோக்கிய பலன்களை தவிர்த்து, இது ஒரு அதி சிறந்த கொசு விரட்டியாகும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இப்படி நமக்கு தெரியாத எவ்வளவோ நல்ல பலன்களை பெற்ற புதினாவை பற்றி தொடர்ந்து காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக் கொள்வது நமது உடல் நலத்தை அதிகரிக்கும்

mint,oil,foodstuff,headache,indigestion ,புதினா, எண்ணெய், உணவு பொருள், தலைவலி, அஜீரணம்

துர்நாற்றத்தை எதிர்த்து செயல்படுகிறது: புதினாவிற்கு கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை உண்டு. இது அனைவரும் அறிந்ததே. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க பெரிதும் உதவுகிறது.

அஜீரணத்தை குறைக்கிறது: அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது , செரிமானத்தை வலுப்படுத்தும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. உமிழ்நீர் சுரப்பியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் விரைந்து நடக்கிறது.


அஜீரணம் குறைகிறது. ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் ஊறவைத்து , அந்த நீரை தொடர்ந்து பருகி வர, அஜீரணம் மட்டுப்படுகிறது.

குமட்டல் மற்றும் தலைவலி குறைகிறது: புதினா, அழற்சியை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருள். ஆகவே தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலியும் அதனால் உண்டாகும் குமட்டலும் கட்டுப்படும்.

Tags :
|
|