Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இயற்கையின் ஆசீர்வாதமான தேங்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

இயற்கையின் ஆசீர்வாதமான தேங்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

By: Nagaraj Tue, 28 June 2022 4:59:46 PM

இயற்கையின் ஆசீர்வாதமான தேங்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

சென்னை: தேங்காய் இயற்கையின் ஆசீர்வாதமாகவும், செழுமையின் சின்னமாகவும், விழாக் காலங்களில் ஒரு மங்களகரமான பொருளாகவும், கைவினைப் பொருளாகவும், சமையலுக்கு இன்றியமையாதப் பொருளாகவும் கொண்டாடப்படுகிறது.உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களில் தெய்வங்களுக்கு தேங்காய் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேங்காய் ‘கல்பவ்ரிக்ஷா’ என்றும் கூறப்படுகிறது. ‘அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்ய கூடிய மரம்’ என்று பொருள்படும். தேங்காய், நாம் தினமும் உபயோகப்படுத்தும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியங்களில் பல பாரம்பரிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகம் முழுவதும் மற்றும் உலகின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 90% இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் ஆசியா முதன்மையான இடத்தில் உள்ளது. தேங்காய் ஐந்து வகையான உணவுப் பொருட்களை வழங்குகிறது.

coconut,immunity,infection,prevents,fiber,much ,தேங்காய், எதிர்ப்பு சக்தி, நோய் தொற்று, தடுக்கிறது, நார்ச்சத்து, அதிகம்

தேங்காய் தண்ணீர், தேங்காய் பால், சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொப்பரை ஆகும். தேங்காயின் கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், இளநீர் ஆகியவற்றை நமது சமையலில் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். தேங்காய் நமது ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் கூட தனி இடம் வகிக்கிறது.

தேங்காய் கொப்பரையின் சத்து, அது வளரும் இடம், காயின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு மாறுபடும். தேங்காய் கொப்பரையில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன, அதே சமயத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் மிதமான அளவில் உள்ளது.கொப்பரையின் கொழுப்பு சத்தில் 89% சாச்சுரேட்டட் கொழுப்பாகும். இந்த கொழுப்புகளில் பெரும்பாலானவை மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCTகள்), அவை சிறுகுடலில் எளிதாக உறிஞ்சப்பட்டு, நமது உடலுக்கு மிக சுலபமாக ஆற்றலைத் தருகிறது. தேங்காய் கொப்பரை கேக், மிட்டாய்கள், கறி மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது. கேண்டிடா எனப்படும் தீங்கு விளைவிக்கும் காளானை எதிர்ப்பு சக்தி தந்து, நோய் தொற்றை தடுக்கிறது.

தேங்காயில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே உள்ளிட்ட கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உற்பத்தி செய்வதற்கும், நமது குடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

Tags :
|