Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளி, இருமலை விரட்ட இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!

சளி, இருமலை விரட்ட இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 13 July 2022 10:14:45 PM

சளி, இருமலை விரட்ட இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: சித்தரத்தை வேர் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். ஒரு சிறிய துண்டை நசுக்கி வாயில் அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை அவ்வப்போது விழுங்கினால் போதும். தொண்டைக் கரகரப்பு நீங்கும். சளி எளிதாகக் கரைந்து வெளியே வந்துவிடும். குரல் கம்மலும் குணமாகும்.

அதிமதுர வேரையும் இது போலவே பயன்படுத்தினாலும் குணம் கிடைக்கும். கடுக்காயைத் தணலிலிட்டுச் சுட்ட பிறகு, அதன் தோலை சிறிதளவு வாயிலடக்கிக் கொண்டிருந்தால், சளி, இருமல் குறைவதோடு,தொண்டையில் சதை வளர்ந்தோ அல்லது அழற்சியும் புண்ணும் ஏற்பட்டிருந்தால் அவையும் குணமாகும்.

ஆடாதோடையின் வேர், முசுமுசுக்கையின் இலை, சித்தரத்தை, அதிமதுரம், ஜடாமாஞ்சில் இவற்றை சம அளவாக எடுத்து, பெருந்தூளாக இடித்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தூளில் 50 கிராம் எடுத்து, அத்துடன் 300 மிலி தண்ணீர் சேர்த்து, சிறு தீயில் காய்ச்சி, 120 மி.லி. ஆனதும் இறக்கி, கஷாய மருந்துகளை நன்றாகக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி, வேளைக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி. வரை தினம் 3 அல்லது 4 வேளை சாப்பிட்டுவர, ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

cure cold,flu,fever,fever ,ஜலதோஷம், சளி, காய்ச்சல், சித்தரத்தை, குணமாகும்

இதே மருந்துகளைக் கொண்டு தயாராக்கிய கஷாயம் 500 மி.லி. எடுத்து, அதில் 250கிராம் சீனா கற்கண்டைக் கரைத்து, மறுபடியும் வடிகட்டி, அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். தேன் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். இந்த சிரப்பை 5 மி.லி. முதல் 10 மி.லி. வரை, தினம் 3-4 வேளை சாப்பிட்டு வந்தாலும், ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

சிலருக்கு சளியுடன் ரத்தம் கலந்து வரும். அவர்கள், ஆடாதோடையின் இலையை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பிட்டு (அ) இட்லி போல ஆவியில் வேக வைத்து, சூடாயிருக்கும் போதே பிழிந்து, 50 மி.லி. சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 15 மி.லி. தேனை விட்டு நன்றாகக் கலந்து, 10 மி.லி. அளவு தினம் 4 முதல் 6 வேளை சாப்பிட, நல்லகுணம் பெறலாம்.
சளி முறிவதற்கும், உலர்வதற்கும், சளி முட்டிக் கொண்டு முகமெல்லாம் புடைத்து வீங்கிக் கொண்டு சகிக்க முடியாத தலைவலியும், காய்ச்சலும் குணமடைவதற்கும் வெற்றிலைக்காம்பு, லவங்கம் (அ) கிராம்பு, ஏலக்காய் விதை இவற்றை சம எடையில் எடுத்து, கொஞ்சம் பால் சேர்த்து அம்மியிலிட்டு அரைத்து, சிறுவில்லைகள் தட்டி, வெய்யிலில் உலர்த்தியதை, பாலிலேயே கரைத்துச் சூடாக்கி, களிபோல் கிண்டியதை, நெற்றி, உச்சந்தலையில் பற்றுப் போடுவதால் விரைவில் குணமடைவார்கள்.

மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து வெல்லப்பாகில் கலந்து உருட்டி வைத்துக் கொள்ளவும். இதில் ஒன்றை வாயில் அடக்கி, உமிழ்நீரை விழுங்க, ஓட்டை வெங்கலத்தின் தொனியில் இருக்கும் இருமல் குணமாகும்.

Tags :
|
|