Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் விளையாட்டுகளுக்கு நேரத்தை ஒதுக்கும் பெற்றோர்கள்

கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் விளையாட்டுகளுக்கு நேரத்தை ஒதுக்கும் பெற்றோர்கள்

By: Karunakaran Sat, 03 Oct 2020 7:23:11 PM

கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் விளையாட்டுகளுக்கு நேரத்தை ஒதுக்கும் பெற்றோர்கள்

கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்கள் மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு விரும்புகிறார்கள். பெற்றோர் தங்களுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும்.

குழந்தைகள் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகிவிடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். ஹூலா ஹூப்ஸ் விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

parents,devote time,childrens games,corona virus panic ,பெற்றோர், நேரம், குழந்தைகள் விளையாட்டுகள், கொரோனா வைரஸ் பீதி

வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம்.

எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். இது உறவையும் வலுப்படுத்தும்.

Tags :