Advertisement

கண் பிரச்னைகளை தடுக்கும் பிராண யோகா முத்திரை

By: Nagaraj Fri, 17 June 2022 11:25:03 AM

கண் பிரச்னைகளை தடுக்கும் பிராண யோகா முத்திரை

சென்னை: கண் நரம்புகள் வலி, கண்களில் நீர் வருதல், கண்களில் கட்டி வருதல், கண் பார்வை மங்குதல், இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் பிராண யோகா முத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
யோகா முத்திரை பயிற்சிகள் மூலம் தீர்வு உண்டு. முதலில் நாம் வாழ்வில் சில ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும். லிவர் நன்கு சக்தி பெற்று இயங்கினால் தான் கண் நரம்புகள், கண் நன்றாக இயங்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரவு 10 மணி முதல் காலை 3 மணி முறை ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். அப்படி தூக்கமில்லாமல் இரவு நேரம் விழித்திருப்பவர்களுக்கு லிவர் சக்தி ஓட்டம் குறைகின்றது.
கண்களில் பிரச்சினைகள் ஏற்படும். தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் பார்ப்பவர்களுக்கு கண்களில் பிராண சக்தி குறைந்து பிரச்சினை ஏற்படும். பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படும். எனவே முதலில் இதை சரி செய்ய வேண்டும். கண்களில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்யும் முத்திரை பிராண முத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

liver power,deep sleep,eye nerves,power,solution ,லிவர் சக்தி, ஆழ்ந்த தூக்கம், கண் நரம்புகள், சக்தி, தீர்வு

பிராண முத்திரையும் கண் ஒளியும் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிரவிரல், சுண்டு விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும்.
இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும். கண்கள் நன்கு தெரியும், கண் வலி, கண்களில் கட்டி, நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் வராமல் வாழலாம்.

தினமும் பச்சை கேரட் இரண்டு சாப்பிடவும். மலை வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுத்துக் கொள்ளவும். கருப்பு திராட்சை பழம் சாப்பிடவும். கொய்யாப்பழம், மாதுளம் பழம் சாப்பிடவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உணவில் அடிக்கடி எடுத்து கொள்ளவும்.

Tags :
|