புரதங்கள் நிறைந்த காய்கறிகள் உங்கள் ஆரோக்கியத்தை உயர்த்தும்
By: Nagaraj Mon, 13 June 2022 11:12:01 AM
சென்னை: புரதங்கள் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுங்கள்... தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
பச்சை காய்கறிகள் நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதுதோடு மட்டுமல்லாமல், உடல் பருமன், பற்களில் ஏற்படும் புற்றுநோய், இரத்த சோகை மற்றும் சிறுநீரக கற்களை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகின்றன.
பச்சைக் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. அதிலும் சில குறிப்பிட்ட பச்சைக் காய்கறிகள் நிச்சயம் டயட்டில் இருக்க வேண்டும். பாகற்காய், வெந்தயக் கீரை, பிற கீரை வகைகளை உணவில் தினமும் சேர்ப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.
இன்றைய வாழ்க்கை முறையில், புற்று நோய் என்பது ஒரு பொதுவான உடல்
பிரச்சனையாகிவிட்டது. இது போன்ற பல கொடிய நோய்களில் இருந்து உங்களைப்
பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்த பச்சைக் காய்கறிகளை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள், பச்சைக் காய்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து,
இரும்பு, தாதுக்கள் மற்றும் கால்சியம் உள்ளது, இது புற்றுநோய் போன்ற
நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
இவை புற்று நோய் போன்ற உயிர்
கொல்லி நோய்கள், உங்களை அண்டாமல் இருக்கச் செய்வதோடு, உங்கள் சருமம்,
கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே நீங்கள் தினமும் உங்கள் உணவில்
பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
பாகற்காய், வெந்தயக் கீரை போன்ற
பச்சைக் காய்கறிகளில் லேசான கசப்பு இருக்கும். இருப்பினும், அத்தகைய
காய்கறிகளில் கால்சியம் அதிகமாகக் காணப்படுகிறது. அவை எலும்புகள் மற்றும்
பற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. உங்கள் பற்கள் மற்றும்
எலும்புகள் வலுவாக இருக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த காய்கறிகளை
சாப்பிடுங்கள். வேகவைத்த கீரை அல்லது பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம்
பையோரியா மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம்.