தலைவலியால் அவதியா... தீர்வுக்கு எளிமையான வழிமுறைகள்
By: Nagaraj Thu, 30 June 2022 11:33:31 PM
சென்னை: இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் தலைவலி. இது பல காரணங்களால் ஏற்படுகின்றது. வேலைச்சுமை, கோடைக்கால வெயில், மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
தலைவலி வந்தால், சரியானால் போதும் என்று பக்க விளைவுகளை அறிந்தும் பெரும்பாலோனோர் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனை தவிர்த்து ஒரு சில எளியமுறைகளில் கூட தலைவலியை போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும். வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும் கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை
போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும். 2 மிளகை எடுத்து
விளக்கில் எரித்து, இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் சளி
தொல்லையில் இருந்து விடுபடலாம். தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு
இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு
வந்தால் விரைவில் தலைவலி குணமாகும்.
புதினா இலையை
எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி
குணமாகும். டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து
வந்தால் தலைவலி குணமாகு முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால்
தலைவலி குணமாகும். தலைவலியால் அடிக்கடி அவஸ்தைபடுபவர்கள் தினமும் காலை
உணவு அருந்துவதற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள
தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.