Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • விதைகளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பரவி கிடக்கிறது

விதைகளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பரவி கிடக்கிறது

By: Nagaraj Sat, 18 Mar 2023 8:08:57 PM

விதைகளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பரவி கிடக்கிறது

சென்னை: ஒவ்வொரு விதைகளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பரவி கிடக்கிறது. விதைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

வேப்ப விதை: வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இந்த பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்களுக்கு தயாரிக்கப்படும் எண்ணெய்களில் சேர்க்கப்படுகிறது. விதையின் மேல் ஓட்டை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெயை தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.

முருங்கை விதை: பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

cashew nut,neem nut,manthi,utirappoku,women ,முந்திரிப்பருப்பு, வேப்பங் கொட்டை, மாந்தை, உதிரப்போக்கு, பெண்கள்

மாங்கொட்டை: மாம்பழத்தில் உள்ள விதையின் பருப்புகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் நீங்கும். மேலும் மூலச் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும்.

புளியங்கொட்டை: புளிய விதையின் மேல் உள்ள ஓட்டை காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு மாறும். இதன் பருப்பு தாதுவை விருத்தி செய்யும்.

முந்திரி பருப்பு: முந்திரியின் உள் இருக்கும் பருப்பானது பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணிக்கும். குழந்தைக்கு உண்டாகும் மாந்தத்தைப் போக்கும்.

Tags :
|