Advertisement

எந்த நோயையும் குணபடுத்திவிடும் தொப்புள் கொடி

By: Karunakaran Mon, 21 Sept 2020 7:33:29 PM

எந்த நோயையும் குணபடுத்திவிடும் தொப்புள் கொடி

முன்பு காலத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கருப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். தற்போது அவை நடைமுறையில் இல்லை. அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. ஒரு சிலரே தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான். உண்மையில் அந்த காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது ?

அந்த காலத்தில் குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள். சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.

umbilical cord,cures,deadly diseases,babies ,தொப்புள் கொடி, குணப்படுத்துகிறது, கொடிய நோய்கள், குழந்தைகள்

குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். இதனால் அந்த நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. இதை தற்போது நாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டோம். தற்போது, தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறதாம்.

இதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறது. வெறும் தொப்புள்கொடிக்கு எதற்கு பணம் கொடுத்து சேமிக்க வேண்டும் ? குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணபடுத்திவிடலாம். இதனால் தான் தற்போது மருத்துவமனைகளில் தொப்புள் கொடியை சேமித்து வைக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags :
|