Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கறிவேப்பிலை இலையை நாம் அடிக்கடி உண்டு வந்தால் பல நன்மைகளாம்

கறிவேப்பிலை இலையை நாம் அடிக்கடி உண்டு வந்தால் பல நன்மைகளாம்

By: vaithegi Tue, 24 Oct 2023 09:14:35 AM

கறிவேப்பிலை இலையை நாம் அடிக்கடி உண்டு வந்தால் பல நன்மைகளாம்

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

1. வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்துவிடும்

2.சிலருக்கு இரத்த சோகை இருக்கும் .இப்படி உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கி ஆரோக்கியம் பிறக்கும் .

curry leaves,good for anemia ,கறிவேப்பிலை ,நன்மை,இரத்த சோகை

3.சிலர் சர்க்கரை நோயினால் பாதித்திருப்பர் .இப்படி பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

4.மேலும் கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, நம் ஆரோக்கியம் காக்கும்

5.மேலும் கறிவேப்பிலை உண்பதால் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

6.நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால்,நல்ல பலன் கிடைக்கும்

7.மேலும் கறிவேப்பிலை உண்பதால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

8.கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம் ,

9.மேலும் கறிவேப்பிலை உண்பதால் முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

10.சிலருக்கு சளி இருக்கும் .இதற்கு , 1 டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் 2 வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்

Tags :