Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சாதாரணமாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழையில் ...இவ்வளவு பயன் இருக்கு !

சாதாரணமாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழையில் ...இவ்வளவு பயன் இருக்கு !

By: vaithegi Thu, 18 Aug 2022 10:05:00 PM

சாதாரணமாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழையில் ...இவ்வளவு பயன் இருக்கு !

சோற்றுக்கற்றாழை அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாகும். தொடர் ஆய்வுகளின் படி, தோல் பராமரிப்பு; வெட்டுக்கள், தீக்காயங்கள், வேணீர் கட்டி, உறைவு மற்றும் கதிர்வீச்சு எரிதல் ஆகியவற்றில் சிகிச்சைமுறைகளை இது அதிக பயனுள்ளதாக ஆக்கும்.அல்சர், அழற்சி குடல் நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு சோற்றுக்கற்றாழை களிம்பு மற்றும் மர பால் பயன் படுத்தப்படுகின்றன.கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை கருங் கற்றாழ, செங்கற்றாழ, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன், சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.சோற்றுக்கற்றாழை களிம்பு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்காமல் வாய் புண்களை தவிர்த்து, சரி செய்ய பயன் உள்ளதாக இருக்கும்.

aloe vera,benefits , சோற்றுக் கற்றாழை,பயன்

மேலும் இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். .சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.சோற்றுக்கற்றாழை களிம்பை ஒரு இரத்தச் சர்க்கரைக் குறை பொருளாக பயன்படுத்த அதிகமாக ஆய்வுகள் செயல் பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆய்வுகள் நீரிழிவு நோயை குறைப்பதில் இதன் பங்கை உறுதிப்படுத்துகின்றன. இறுதி கட்ட ஆய்வுகள் தற்போது சிகிச்சை பயன்பாட்டிற்கான அளவையும், பாதுகாப்பையும் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.

அதே சமயம் கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும். மேலும் முடி வளர்ச்சிக்கும், முடி கொட்டுவதை தடுக்கின்றன மற்றும் முடி நரைப்பதை குறைக்கின்றன.இதை அறிந்து பயன் பெறுவோம்.

Tags :