Advertisement

மாம்பழங்கள் பற்றிய முதன்மையான பத்து விஷயங்கள்

By: Karunakaran Sun, 15 Nov 2020 12:03:39 PM

மாம்பழங்கள் பற்றிய முதன்மையான பத்து விஷயங்கள்

மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளில் முதன்மையான பத்து விஷயங்கள் :
ஒவ்வொரு மாம்பழத்திலும் 81 சதவீதம் தண்ணீர், 0.4 சதவீதம் கொழுப்பு, 0.6 சதவீதம் புரதம், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 17 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளன. நமக்குத் தேவையான முக்கிய தாதுப்பொருட்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், கந்தகம் ஆகியவை மாம்பழத்தில் நிறைந்துள்ளன. மாம்பழத்தில் சுமார் 1000 ரகங்கள் இருக்கின்றன.

உலகில் மாம்பழம் விளையும் பரப்பளவில் சுமார் 50 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. நம் நாட்டிலேயே அதிகளவில் மாம்பழத்தை விளைவிப்பது, ஆந்திரப் பிரதேசம். உலகில் உற்பத்தி செய்யப்படும் வெப்பமண்டலப் பழங்களில் 50 சதவீத அளவைப் பிடித்திருப்பது மாம்பழம்தான். மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இந்தியா தவிர பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவில் மாம்பழம் விளைகிறது.

mangoes,malcova,maligapath,india ,மாம்பழம், மால்கோவா, மாலிகாபத், இந்தியா

நமது தேசியப் பழம், மாம்பழம்தான். பாகிஸ்தான், பிலிப்பைன்சின் தேசியப் பழமும் மாம்பழம்தான். வங்காளதேசத்தின் தேசிய மரம், மாமரமாகும். 16-ம் நூற்றாண்டில் பாரசீக வியா பாரிகள் இந்தியாவில் இருந்து மாம்பழத்தை கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 19-ம் நூற்றாண்டில் மெக்சிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் மாம்பழம் சென்றது. முகலாயப் பேரரசர் அக்பர், மாம்பழப் பிரியர். இவர் கி.பி. 1590-ல் தனது ‘அயினி அக்பரி’ நூலில் மாம்பழங்களின் தரம், சுவை குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

அக்பருக்குச் சொந்தமாக, ஒரு லட்சம் மாமரங்கள் கொண்ட ஒரு பெருந்தோப்பு இருந்ததாம். உத்தரபிரதேச மாநிலத் தலை நகர் லக்னோவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள, மாலிகாபாத் கிராமம்தான் இந்தியாவின் மாம்பழத் தலைநகர் எனப்படுகிறது. இங்கு சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 700 வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. லக்னோவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தசேரி கிராமத்தில் உள்ள ஒரு தசேரி மாமரம் 300 வயதானது என்கிறார்கள். மனிதர் யாரும் நட்டு வளர்க்காமல், தானாக முளைத்தது என்றும் இதனைச் சொல்கிறார்கள்.

Tags :