ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மஞ்சள்
By: Nagaraj Mon, 07 Dec 2020 08:16:25 AM
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகையாக மஞ்சள் இருக்கிறது.
பூமிக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகள் பல இருக்கின்றன. அதில் உணவுக்கு சுவை கூட்டவும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகையாக மஞ்சள் இருக்கிறது.
மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
பூமிக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகள் பல இருக்கின்றன. அதில் உணவுக்கு சுவை கூட்டவும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகையாக மஞ்சள் இருக்கிறது. வலி நிவாரணியாக மஞ்சள் பயன்படுகிறது. உடல் அஜீரண பிரச்சனைகளை நீக்க மஞ்சள் பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.
தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா
இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை
வகிக்கிறது. இதனாலேயே தான் சொல்வார்கள் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தால்
முகம் அத்துணை பளபளப்பாக இருக்கும் என்று. ஆனால் இந்த மஞ்சள் பெண்களின்
அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல, இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ
நன்மைகள் ஆண்களுக்கும் சமமானதாகும்.
கஸ்தூரிமஞ்சளையும்,
பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம்
பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும். கஸ்தூரிமஞ்சள்,
பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து
குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக்
ஆகும்.
முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு,
பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து
குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம்.
அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.
உடல் அஜீரண பிரச்சனைகளுக்கு மஞ்சள்
எடுத்துக் கொண்டால், குணமாகும். வாயு பிரச்சனைகளும் நீங்கும் மஞ்சளில் உள்ள
அழற்சி எதிர்ப்பு சக்தி, உடல் வலிகளை நீக்க பயன்படுகின்றன. எனவே, உடல்
ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு மஞ்சளை உணவுகளில் சேர்த்து கொள்வது
அவசியமாகும்
இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கவும், டைப் 2 நீரிழிவு
நோயை கட்டுக்குள் வைக்கவும் மஞ்சள் சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ள
வேண்டும். மருத்துவரின் பரிந்துரையில், எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு
க்ளாஸ் பாலில், ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால்,
கிருமிகளினால் ஏற்படும் நோய்கள் தாக்காமல் தடுக்க உதவிகின்றன. மேலும், நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.