36 ஆயிரம் மெட்ரிக் டன் ஏற்றிய உரக்கப்பல் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்
By: Nagaraj Thu, 09 Mar 2023 10:15:55 PM
கொழும்பு: 36 ஆயிரம் மெட்ரிக் டன் அடங்கிய உரக்கப்பல், நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த கப்பல் வரும் 17ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவி திட்டத்தின் கீழ் குறித்த உரத்தொகை கிடைக்கப் பெறவுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைப்பாட்டினால் நெற்கதிகர்கள் மஞ்சல் நிற நோய்க்குட்படுவதை உரத்தை பயன்படுத்துவது வாயிலாக தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
report |