Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை

டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை

By: Karunakaran Thu, 10 Dec 2020 2:46:18 PM

டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை

டீன்ஏஜ் பருவம் தனக்குள்ளே ஈகோவை வளர்த்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பருவம். பெற்றோர் சொல்லை மீறிப் பார்ப்போமே என்று தோன்றும். மொத்தத்தில் ‘பெற்றோர்கள்தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு முதல் எதிரி’ என்று நினைக்கும் பருவம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர் பெரும் முயற்சி எடுக்கவேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ராகவ் பள்ளியில் முதல் மாணவன். ஆனால் கல்லூரியில் அந்த புத்திசாலித்தனம் எடுபடவில்லை. நாளுக்கு நாள் படிப்பில் பின்தங்கினான், ஆனால் படிக்கும் நேரம் குறையவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தான். பெற்றோர் குழம்பி அவனுடைய புத்தக பையை சோதனை போட்டபோதுதான் உண்மை புரிந்தது. அத்தனையும் ஆபாச புத்தகங்கள்.அதை படித்து எப்படி கல்லூரியில் மார்க் வாங்க முடியும்? என்று வருந்திய பெற்றோர், குடும்பநல மருத்துவர் உதவியுடன் கவுன்சலிங் செய்து புரிய வைத்து, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி திசை திருப்பிவிட்டனர்.

parents,nurture,children,adolescence ,பெற்றோர், வளர்ப்பு, குழந்தைகள், இளமை

மனீஷா என்ற பெண் தன் ஒரே மகளை கல்லூரிக்கு அனுப்பும்போது ‘ஒழுங்காக படி. காதலில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்காதே’ என்று அறிவுரை கூறிவைத்தாள். மகளுக்கு அறிவுரை கூறும் இவள், கல்லூரியில் படிக்கும்போது ஊரே பயப்படும் ஒரு ரவுடியை காதலித்து, பெற்றோரை கதற வைத்தவள். சினிமாப் படங்களில் வருவதுபோல் ‘நான் திருமணம் செய்துக் கொண்டு அவரை திருத்திவிடுவேன்’ என்று பெற்றோரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் ஒருநாள், அவன் எதிரிகளால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். அதன் பின்பு வந்த செய்திகள்தான், அவன் மகாகொடூரன் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

டீன்ஏஜ் என்பது ஒரு மேஜிக் பருவம். காதல் கண்ணை மறைக்கும். அப்போது அறிவு மங்கும். கடந்து வந்த பிறகு தான் விழவிருந்த அதலபாதாளத்தின் அளவு தெரியும். பிள்ளைகள் டீன்ஏஜ் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. பொறுமையும் அவசியமாகிறது. பக்குவப்பட்ட அறிவு நம்மை வழிநடத்தும். பக்குவப்படாத செயல்கள் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.

Tags :