தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 867 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,09,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,867 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 364 பேர் அண்ணா நகர் - 385 பேர் தேனாம்பேட்டை - 314 பேர் தண்டையார்பேட்டை - 160 பேர் ராயபுரம் - 205 பேர் அடையாறு- 401 பேர் திரு.வி.க. நகர்- 326 பேர் வளசரவாக்கம்- 248 பேர் அம்பத்தூர்- 300 பேர் திருவொற்றியூர்- 82 பேர் மாதவரம்- 155 பேர் ஆலந்தூர்- 158 பேர் பெருங்குடி- 148 பேர் சோழிங்கநல்லூர்- 90 பேர் மணலி - 55 பேர்.