பேஸ்பால் விளையாட்டின் போது மைதானத்தில் எழுந்த சுழல் காற்றில் சிக்கி தவித்த சிறுவன்

புளோரிடா: சுழற்காற்றில் சிக்கி தவித்த சிறுவன்... அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டின் போது மைதானத்தில் எழுந்த மணல் சுழல் காற்றில் சிக்கி தவித்த 7 வயது சிறுவனை அருகில் இருந்த நடுவர் மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சோயா என்ற பெயர் கொண்ட அந்த சிறுவன் மைதானத்தில் நின்று கொண்டிருந்த போது திடீரென மணல் சுழல் காற்று உருவாகி அவனை சூழ்ந்து கொண்டது.

இதன் காரணமாக அவன் மணல் புழுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தான். இதனை அருகில் இருந்த நடுவர் பார்த்ததும் விரைந்து சென்று அந்த சிறுவனை வெளியே இழுத்து காப்பாற்றினார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. இருப்பினும் நடுவரின் விரைவான நடவடிக்கையால் அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டதற்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.