நான் நலமாக இருக்கிறேன்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பின்னணி பாடகி எஸ்.ஜானகி

நான் நலமுடன்தான் இருக்கிறேன். இந்த மாதிரி வதந்தி பரப்பி என்னை நீங்கள் கொல்லாதீா்கள் என்று தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பின்னணி பாடகி எஸ்.ஜானகி.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பப்பட்டது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தாரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஜானகியின் உடல் நிலை குறித்து சமூகவலைதளங்களில் மீண்டும் வதந்தி பரவியது.

இதற்கு அவரது மகன் முரளி மற்றும் இசையமைப்பாளா் தீனா ஆகியோா் மறுப்பு தெரிவித்தனா். இந்நிலையில் ரசிகா் ஒருவருடன் பாடகி ஜானகி பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் ஜானகி பேசியிருப்பதாவது: 'எல்லாருமே செல்லிடப்பேசி மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறாா்கள். எத்தனை முறை தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறாா்கள் என்று தெரியவில்லை. இது 6-ஆவது முறை. வேண்டுமென்றே இதுபோன்று வதந்தியைப் பரப்பி வருகிறாா்கள்.

முன்னதாக இதே மாதிரி செய்தி வந்தபோது பதில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்தி பரப்பி என்னை நீங்கள் கொல்லாதீா்கள். நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற அடிக்கடி பிரபலங்கள் பற்றிய வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.