அதிவேகத்தில் காரை இயக்கிய சாரதி... அனுமதி பத்திரம் ஒரு மாதத்திற்கு ரத்து

கனடா: கனடாவில் அதி வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதியொருவரை போலீஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அவரது சாரதி அனுமதி பத்திரம் 30 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் மார்க்கம் பகுதியின் வீதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தடவைகள் இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மார்க்கமின் 404ம் இலக்க மற்றும் 407ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சாரதிக்கு 30 நாட்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடுமையான பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் இவ்வாறு வாகனத்தை செலுத்துவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.