டிரைவர் டாக்டரான சம்பவம்... உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசம்: டிரைவர் டாக்டரான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவமனையில் நோயாளிக்கு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்டு உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் திவாகர் சிங், மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் ஊசி போடுவதை வீடியோவில் காணலாம்.


இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ அலுவலர், மருத்துவர் மற்றும் அங்கு நியமிக்கப்பட்டுள்ள இதர மருத்துவ ஊழியர்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கவும், சம்பவம் குறித்து அறிந்ததும் நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.