Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

By: Monisha Tue, 17 Nov 2020 12:37:51 PM

ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

நமது உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய சத்துக்கள் அவரைக்காயில் நிறைந்து காணப்படுகிறது. அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் இருக்கும் பொட்டாசியம் சத்து இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

health,nutrition,beans,calcium,potassium ,ஆரோக்கியம்,சத்து,அவரைக்காய்,கால்சியம்,பொட்டாசியம்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரைப் பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்.

Tags :
|
|