Advertisement

எலுமிச்சை சுவையில் காரசாரமான பன்னீர் செய்வது எப்படி?

By: Monisha Wed, 04 Nov 2020 4:38:57 PM

எலுமிச்சை சுவையில் காரசாரமான பன்னீர் செய்வது எப்படி?

எலுமிச்சை சுவையில் மசாலா கலந்து காரசாரமான பன்னீர் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
பட்டர் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி – 1டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – 1டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – 1டீஸ்பூன்
குடை மிளகாய் – 1/2 கப்
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
பூண்டு – 8
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை – சிறிதளவு
சோள மாவு – 1டீஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு – தேவையான அளவு

paneer,butter,onion,lemon,corn flour ,பன்னீர்,பட்டர்,வெங்காயம்,எலுமிச்சை,சோள மாவு

செய்முறை
முதலாவது கடாய் அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகியதும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமானதும் குடை மிளகாயை சேர்க்கவும். பின் மஞ்சள், கிரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பனீர் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பின் சோள மாவை தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறுங்கள். கெட்டிப்பதம் வரும்போது எலுமிச்சை சாறை ஊற்றி பிரட்டி விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் எலுமிச்சை சுவையில் பனீர் மசாலா தயார்.

Tags :
|
|
|
|