- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- சமையல் செய்யும் போது கவனித்து செய்ய சில டிப்ஸ்
சமையல் செய்யும் போது கவனித்து செய்ய சில டிப்ஸ்
By: Nagaraj Sun, 18 Sept 2022 4:39:40 PM
சென்னை: சமையல் செய்வதை அருமையாக. அன்பாக செய்யும் பெண்களுக்காக சில டிப்ஸ்.
ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது. முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும். எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும். முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
டைல்ஸ்க்கு இடையில் இருக்கும் அழுக்கை போக்க பிளீச்சிங் பவுடர் சிறிது
எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி பட்ஸ் கொண்டு அழுக்கு
இருக்கும் இடங்களில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு துடைத்தால்
பளிச்சென்று ஆகி விடும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட
பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் சுவை செமையாக இருக்கும். நாம்
தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற
வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகி விடும்.
சேப்பங்கிழங்கை
வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால்
வழுவழுப்பு இருக்காது. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன்
சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும்
வரும்.