Advertisement

பிரமாதமான ருசியில் தேங்காய் பால் சாதம் செய்து அசத்துங்கள்

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:56:12 PM

பிரமாதமான ருசியில் தேங்காய் பால் சாதம் செய்து அசத்துங்கள்

சென்னை: ருசியில் பிரமாதமாக இருக்கும் தேங்காய் பால் சாதம் செய்து கொடுங்கள். உங்கள் குடும்பத்தினரின் விருப்ப உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒன்றரை கப்அரிசி - ஒன்றரை கப்சின்ன வெங்காயம் - 12இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டிஏலக்காய் - 3கிராம்பு - 4பட்டை - 2உப்பு - 2 தேக்கரண்டிஎண்ணெய் - கால் கப்

coriander leaves,coconut milk,ginger,cardamom ,கொத்தமல்லி தழை, தேங்காய்பால், இஞ்சி, ஏலக்காய்

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். அரிசியை கழுவி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து இரண்டே கால் கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எலக்டிரிக் குக்கரில் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் இரண்டே கால் கப் தேங்காய் பால் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பு சேர்க்கவும். குக்கர் பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பில் வைத்தே கொதிக்க விடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது அரிசியை போடவும்.

அதன் மேலே கொத்தமல்லி தழையினைத் தூவி கிளறி விட்டு 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் பாத்திரத்தை எடுத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து மூடி வைத்து வேகவிடவும்.

சாதம் நன்கு வெந்தவுடன் பாத்திரத்தை குக்கரில் இருந்து எடுத்துவிடவும். மேலே கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும். அருமையான சுவையில் தேங்காய் பால் சாதம் ரெடி.

Tags :
|