Advertisement

பசியின்மையை போக்கும் கருணைக்கிழங்கில் மசியல் செய்முறை

By: Nagaraj Wed, 13 July 2022 4:11:17 PM

பசியின்மையை போக்கும் கருணைக்கிழங்கில் மசியல் செய்முறை

சென்னை: கருணைக்கிழங்கு மசியல் மற்றுமொரு செட்டிநாட்டின் அற்புதத்தயாரிப்பு என்று சொல்லலாம். பொதுவாக கருணைக்கிழங்கு அதிக மருத்துவ குணம் நிறைந்தது, குறிப்பிட்ட சில சுகாதார நலன்கள் கருதி இந்த கிழங்கு வகை பெரும்பாலானோர் வீட்டிலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
பசியின்மை குணப்படுத்தும், மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.மூல நோய் தொடர்பான பிரச்சினை, இரத்தப்போக்கு போன்றவற்றையும் குறைக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் நன்று. முக்கியமாக இந்தக்கிழங்கு மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
அற்புத சுவையுடைய இந்த மசியல் ரசம் சாதம், சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு -1/2 கிலோமிளகாய்ப்பொடி-1 தே .கபுளி -1 மேஜைக்கரண்டிஉப்பு- 1 தே .கமஞ்சள் தூள்-1/4தே .கபூண்டு -3 பல், தட்டி வைத்துக்கொள்ளவும்.கறிவேப்பிலை-1 கொத்துவெங்காயம்-1தக்காளி-1 சிறியதுபச்சை மிளகாய்-2 கீறிக்கொள்ளவும்
தாளிக்க
எண்ணெய் -1 மேஜைக்கரண்டிசோம்பு-1/2 தே .கசீரகம்-1/2 தே .க

yam,chilli powder,tamarind,salt,turmeric powder ,கருணைக்கிழங்கு, மிளகாய்ப்பொடி, புளி, உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை: கருணைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும். தோல் உரித்த கிழங்கை கையால் மசித்து, உப்பு, புளிச்சாறு மிளகாய்ப்போடி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளித்து கொள்ளவும் கறிவேப்பிலை, வெட்டிய வெங்காயம் தக்காளியை சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், கலந்த கிழங்கு கலவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வேகவிடவும் .

மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும், அதுவே தயாரான பக்குவம்.இப்போது கருணைக்கிழங்கு மசியல் தயார்.

Tags :
|
|