Advertisement

சுவை மிகுந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்முறை

By: Nagaraj Thu, 21 July 2022 7:30:34 PM

சுவை மிகுந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்முறை

சென்னை: ஒரு மாற்றத்திற்கு தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். அந்தளவிற்கு சுவை உங்களை கட்டிப் போட்டு விடும்.
தேவையானவை:
பாசுமதி அரிசி – 1 கப்பட்டாணி – 1/2 கப்வெங்காயம் – 1கெட்டியான தேங்காய் பால் – 1 கப்தண்ணீர் – 1/2 கப்உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு :
புதினா – 1/2 கப்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 5வரமிளகாய் – 2துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 1/2 இன்ச்பூண்டு – 10 பற்கள்

தாளிப்பதற்கு :
நெய் – 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்பிரியாணி இலை – 1பட்டை – 1/4 இன்ச்கிராம்பு – 2 ஏலக்காய் – 1

coconut milk,pea biryani,basmati rice,bark,salt ,தேங்காய் பால், பட்டாணி பிரியாணி, பாசுமதி அரிசி, பட்டை, உப்பு

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!

Tags :
|