Advertisement

அருமையான சுவையில் தக்காளி அடை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Mon, 19 Sept 2022 8:32:36 PM

அருமையான சுவையில் தக்காளி அடை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: அருமையான சுவையில் தக்காளி அடை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தக்காளி நம் தினசரி உணவுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி வெறுமனே சாப்பிடுவர். இந்த அடையில் அரிசி, தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். தக்காளி உறுதியான எலும்புகளுக்கும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் என்று பல வகையில் உடலுக்கு நன்மை அளிக்கிறது.

வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

தேவையானவை:

இட்லி அரிசி – 1 கிலோ
நாட்டுத் தக்காளி – 5
பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் – 1/2 கிலோ
சோம்பு – 2 மேஜைக்கரண்டி
காய்ந்த குண்டு மிளகாய் – 5
தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது (அதிகம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்)
பெருங்காயம் – 1 சிட்டிகை
நல்லெண்ணை – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

tomatoes,chilies,aniseed,salt,adi,asparagus,olive oil ,தக்காளி, மிளகாய், சோம்பு, உப்பு, அடை, பெருங்காயம், நல்லெண்ணெய்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டு மற்றும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். குறைந்த பட்ச்சம் 5 மணி நேரம் ஊறவேண்டும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்துள்ள அரிசி நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

அரிசியை நன்றாக வடிகட்டி கிரைண்டரில் போட்டு அத்துடன் அரிந்து வைத்துள்ள தக்காளி, காய்ந்த குண்டு மிளகாய், சோம்பு, உப்பு மற்றும் லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு மசாலா வடை பதத்தில் அதாவது கரகரவென்று அரைபட்டவுடன் கிரைண்டரை நிறுத்திவிடவும் இல்லையென்றால் மாவு மையாக அரைத்துவிடும் மற்றும் சுவையாக இருக்காது. அதனால் கிரைண்டரை நிறுத்தி மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.


வெங்காயத்தை நல்ல பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த மாவு பாத்திரத்தில் அரிந்த வெங்காயம், துருவிய தேங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பு கரண்டியை வைத்து நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். அடுப்பின் அருகே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். பிறகு அடை மாவை எடுத்து இரண்டு முறை தோசை கல்லில் போட்டு கையால் வட்டமாக தட்ட வேண்டும். அடையை தட்டும் போது தண்ணீர் தொட்டு தட்ட வேண்டும் அப்பொழுது தான் தோசை கல்லின் அனல் கையை சுடாது மற்றும் எளிதாக தட்டவும் முடியும்.

தட்டியவுடன் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றி வேகவைக்கவும். இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும். இப்படி செய்வதால் அடை சீக்கிரமாக வேகும் இல்லை என்றால் வேகுவதற்கு சிறிது நேரமாகும் அவ்ளவுதான். சிறிது வெந்தவுடன் அதாவது 4 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக வைக்கவும். மறுபடியும் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றவும். பிறகு இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும்.


4 நிமிடம் கழித்து இட்லி பானையின் மூடியை எடுத்து பார்த்தால் நல்ல பொன்னிறமாக இருக்கும். அதன் பின் அடையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்படியாக மீதம் உள்ள மாவையும் அடையாக செய்யவும். இந்த சுட சுட அடையுடன் தேங்காய் சட்னி மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இல்லை என்றால் வெறுமனே சாப்பிடலாம்.

Tags :
|
|