Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பச்சை பயறு கார தோசை

By: Nagaraj Sun, 12 June 2022 4:55:50 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பச்சை பயறு கார தோசை

சென்னை: பச்சைப் பயறு கார தோசை உடலுக்கு ஊட்டம் அளிக்கும் உணவு. இதை வாரம் இரண்டு முறையாவது செய்து சாப்பிட்டு வாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 7, மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 4 பல் நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

anise,pepper,cumin,salt,peanut oil,to taste ,சோம்பு, மிளகு, சீரகம், உப்பு, கடலை எண்ணெய், சுவை

செய்முறை: பச்சைப் பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இவற்றுடன் பூண்டு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். கடலை எண்ணெய் ஊற்றி தோசை செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

Tags :
|
|
|
|