- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- அறுசுவையையும் ஏற்படுத்தும் தஹி பூரியை வீட்டிலேயே செய்யும் முறை
அறுசுவையையும் ஏற்படுத்தும் தஹி பூரியை வீட்டிலேயே செய்யும் முறை
By: Nagaraj Thu, 04 Aug 2022 9:41:22 PM
சென்னை: சாட் வகைகளில் தஹி பூரி தவிர்க்க முடியாதது. தயிரின் புளித்த சுவை, இனிப்பு சுவை , காரம் என அறுசுவையும் அலாதியானது. இதற்காகவே பலரும் சாட் கடைகளில் தஹி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கு பிடித்த இந்த உணவை நாமே செய்து சாப்பிட்டலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பானி பூரி - 6
உருளைக்கிழங்கு - 4
சாட் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - 1/2 கப்
தக்காளி - 1
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி சட்னி , புளி சட்னி - தேவையான அளவு
செய்முறை: முதலில் உருளைகிழங்குகளை வேக வைத்து உரித்து வைத்து
கொள்ளவும். பின்னர் புளி சட்னி தயார் செய்ய, புளியை ஒரு க்ளாஸ் தண்ணீரில்
ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வைத்து கொள்ளவும்.
அதில் 3 பேரீட்சை
பழம், 1/4 கப் வெல்லம், அரை ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக
வைக்கவும், நன்கு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறியவுடன் மிக்சியில்
அரைத்து எடுத்து எடுத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து புளிச்சட்னிக்கு
ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, 1
ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, இதனுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து
நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் உருளைக்கிழங்கு
எடுத்து நன்கு மசித்து அதனுடன், மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள்,
உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
மற்றொரு பவுலில் தயிர், உப்பு சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்.
இப்பொது
ஒரு பூரியை எடுத்து லேசாக உடைத்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலா, புளி
சட்னி, கொத்தமல்லி சட்னி, நறுக்கிய வெங்காயம் எடுத்து கொண்டு அதன் மீது
தயிர் ஊற்றி, மிக்சர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்தால் தஹி பூரி
தயார். இதில் மாதுளை விதைகளை அழகுபடுத்தலாம், இந்த டிஷ் மிகவும் அழகாகவும்
இருக்கும்.