Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கேழ்வரகு கூழ் எப்படி செய்யலாம்

By: Nagaraj Sun, 16 Apr 2023 11:26:45 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கேழ்வரகு கூழ் எப்படி செய்யலாம்

சென்னை: உடலுக்கு ஊட்டமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கேழ்வரகு கூழ் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை: கேழ்வரகு - கால் கிலோ, கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா 25 கிராம், பொட்டுக்கடலை, கம்பு - தலா 100 கிராம். முந்திரி, பாதாம் - தலா 10, ஏலக்காய் - 5, பார்லி - 4 டேபிள்ஸ்பூன், நெய், சர்க் கரை - தலா ஒரு டீஸ்பூன்,

digestion,nutrition,nutrition,child,health,cereals ,ஜீரணம், கேழ்வரகு, ஊட்டச்சத்து, குழந்தை, ஆரோக்கியம், தானியங்கள்

செய்முறை: கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும். வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும்.

இவற்றுடன் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடுபடுத்தவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கிளறவும். சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும். இதனுடன் நெய், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

Tags :
|
|