Advertisement

செம்பருத்திப்பூ சேர்த்த புளிக்காய்ச்சல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Fri, 21 July 2023 7:27:31 PM

செம்பருத்திப்பூ சேர்த்த புளிக்காய்ச்சல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

சென்னை: உடலுக்கும் ஆரோக்கியம், வித்தியாசமான ருசியில் செம்பருத்திப்பூ புளிக்காய்ச்சல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
ஒற்றை இதழ் செம்பருத்திப் பூக்கள் – 50சின்ன வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 2 (அ) 3புளி – 1 எலுமிசீசை அளவுநல்லெண்ணெய் – 3 தேக்கரண்டிகடலைப்பருப்பு – 2 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டிகறிவேப்பிலை – சிறிதளவகடுகு – ¼ தேக்கரண்டிஉப்பு – ருசிக்கு தேவையானது

hibiscus,sour,idli,dosa,mustard,chickpeas ,செம்பருத்திப்பூ, புளிக்காய்ச்சல், இட்லி, தோசை, கடுகு, கடலைப்பருப்பு

செய்முறை: புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். செம்பருத்திப் பூக்களில் இருக்கும் மகரந்தப் பொடியை எடுத்துட்டு, அதைப் பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பருப்புகள் சிவந்ததும் வெங்காயத்தையும், இரண்டாக கீறிய பச்சை மிளகாயையும் போட்டு கிளறவும். அதோடு நறுக்கின செம்பருத்திப் பூக்களையும் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து வந்ததும், வத்தியதும் இறக்கி வைக்கவும். வாசனையுடன் இருக்கும் இந்த புளிக்காய்ச்சலை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்தது.

Tags :
|
|
|