Advertisement

கிராமத்து ருசியில் கொள்ளு- கருப்பு உளுந்து வடை செய்வோமா!!!

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:43:02 PM

கிராமத்து ருசியில் கொள்ளு- கருப்பு உளுந்து வடை செய்வோமா!!!

சென்னை: கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான். அதிலும் கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை: முளை விட்ட கொள்ளு - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்), பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்), நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.

coriander leaves,mint,curry leaves,spring onion,vada ,கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வடை

செய்முறை: கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

Tags :
|