Advertisement

சுவையான முறையில் சுறா புட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Thu, 29 Dec 2022 9:45:06 PM

சுவையான முறையில் சுறா புட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

சென்னை: கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு.

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – ½ ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்

shark pudding,coriander leaves,turmeric powder,chili powder,coriander powder,pepper powder ,சுறா புட்டு, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள்

செய்முறை: முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.

இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும். மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும். மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும். இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

Tags :