- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- ருசி, சுவை மிகுந்த மக்கன் பேடா செய்து பார்ப்போம் வாங்க!!!
ருசி, சுவை மிகுந்த மக்கன் பேடா செய்து பார்ப்போம் வாங்க!!!
By: Nagaraj Tue, 20 Dec 2022 10:32:07 PM
சென்னை: ருசியும், சுவையும் மிகுந்த மக்கன் பேடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் : மைதா – 1 கப், இனிப்பு இல்லாத கோவா – 150 கிராம், வெண்ணெய் – 1 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு
பூரணம் செய்ய தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு – 1 ஸ்பூன், சாரைப் பருப்பு – 1 ஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு
சர்க்கரை பாகு செய்ய : சர்க்கரை – 1 1/2 கப், தண்ணீர் – 1 கப்
செய்முறை : மைதாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு
பாத்திரத்தில் சமையல் சோடாவை போட்டு அதனுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல்
வரும் வரை கலக்க வேண்டும். மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும். இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக்
கொள்ள வேண்டும்.
பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரப்பருப்பு,
சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு
பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை போட்டு அதனுடன் 1 கப் அளவிற்கு
தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை
தயாரித்துக் கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய
உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
உருண்டையின் நடுவில் லேசாக
தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிட
வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள
உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். பொரித்த உருண்டைகளை
சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாற சுவையான மக்கன் பேடா தயார்.