Advertisement

பிரட் அல்வா செய்து கொடுத்து பாருங்கள்.. குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:27:50 PM

பிரட் அல்வா செய்து கொடுத்து பாருங்கள்.. குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்

சென்னை: நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக வைப்பதற்கு பிரட் உதவுகிறது. அருமையான சுவையில் வித்தியாசமான ஒரு இனிப்பு செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது வீட்டில் பிரட் இருந்தால், அந்த பிரட்டை வைத்து ஒரு அல்வா செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். இப்போது அந்த பிரட் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
இனிப்பு பிரட் – 1/4 கிலோ
நெய் – 1 கிலோ
சர்க்கரை – 3/4 கிலோ
முந்திரி – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்

bread halva,milk,cashews,almonds,relish ,பிரட் அல்வா, பால்,  முந்திரி, பாதாம், சுவை

செய்முறை: முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து வைத்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து பிறகு பாத்திரம் சூடானவுடன் நெய் விட்டு அதில் முந்திரி ,பாதாம் ,திராட்சை போட்டு வறுக்கவும்.

பின்பு பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஒரு தட்டில் வைக்கவும்.பிரட் பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் பாலானது நன்கு கொதிகும் போது சர்க்கரை போட்டவுடன் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.

அதற்குள் பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அந்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை அந்த பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 5-6 நிமிடம் வேக வைக்கவும்.

இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!! இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.

Tags :
|